கலாய் கருத்து கவிதை A blog about interesting topics ,Views on current issues & interesting topics; poetry
Wednesday 12 October 2016
Thursday 6 October 2016
வளையலோசை
வாழைமரம் வரவேற்க
வாசலிலே பெருங்கூட்டம்
வளைகாப்பு வைபோகம்...!
வெள்ளைச்சட்டையில் மாப்பிள்ளை
கிண்டலடிக்கும் இளவட்டம்.!
தத்தித்தாவும் சிறுவர்கள்
தாவணிப்பெண்கள் அணிவகுப்பு.!
"கலகல" சிரிப்போசை
சிணுங்கிடும் வளையலோசை
முகத்தில் மகிழ்ச்சி
அவள் இன்புற்றிருந்தாள்
அவளின் வெட்கத்திற்கு
மஞ்சள் நிறம் பூசப்பட்டுக்கொண்டிருந்தது....
எல்லோரும் முறைப்பார்த்து
முன் செல்ல
நான் மட்டும் காலை
பின்வைத்தேன்
என் பிறப்பை நொந்தபடி....
நெஞ்சில் வந்தேறியது
பொறாமையும் கோபமும்..
கண்ணில் நீர்
கரை கடந்தது...
கூட்டத்தில் ஒரு குழந்தை
ஆள்தெரியாமல்
"அம்மா "என்று எனையழைக்க
'மலடி' பட்டம் வாங்கிய
என் மனதில்
முதன்முதலாக சுரந்தது பால்..!!!
- அரவிந்த்.
Subscribe to:
Posts (Atom)
காதல் எனப்படுவது யாதெனில்..!
( Disclaimer -காதல் என்பது இதுதான், அதன் அறிகுறிகள் இதுதான் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அப்படி பொதுவாக வரையறுப்பது, சரியாகவும் இரு...
-
அசுரன் ஒரு புரிதல் (Understanding Asuran) " ஒரே மண்ணுல பொறக்குறோம் ஒரே மொழிய பேசுறோம் இது ஒன்னு போதா...
-
"மொத்தம் 12 மாசம்மா.. நிறைய பிரச்சன ..மூச்சுத் திணற திணற வச்சு செஞ்சுச்சு..சரி செஞ்சுட்டு போங்கன்னு விட்டுட்டேன்" "என்னது வ...
-
( Disclaimer -காதல் என்பது இதுதான், அதன் அறிகுறிகள் இதுதான் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அப்படி பொதுவாக வரையறுப்பது, சரியாகவும் இரு...